ஆதாம் ஏவாளின் கஷ்டமான வாழ்க்கை The hard life of Adam and Eve (Tamil Bible stories part 1,4)

 ஆதாம் ஏவாளின் கஷ்டமான வாழ்க்கை



தோட்டத்திற்கு வெளியே ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நிறைய பிரச்சினைகள் இருந்தன. சாப்பாட்டுக்காக அவர்கள் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியிருந்தது. சுற்றிவர அழகிய பழ மரங்களைப் பார்ப்பதற்குப் பதிலாக ஏராளமான முள் செடிகளைத்தான் பார்த்தார்கள். ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், அவருடனிருந்த தங்கள் நட்பை முறித்துக்கொண்டபோது அதுதான் நடந்தது.

ஆனால் ஆதாம் ஏவாளுக்கு மோசமான வேறொன்றும் நடந்தது, ஆம், அவர்கள் குறிப்பிட்ட வயதிற்க்கப்புறம் சாகத் தொடங்கினார்கள். ஒரு குறிப்பிட்ட மரத்தின் பழத்தைச் சாப்பிட்டால் அவர்கள் செத்துப் போய்விடுவார்கள் என்று கடவுள் எச்சரித்திருந்தது உனக்கு நினைவிருக்கிறதா? அவர்எச்சரித்தது போலவே, அதைச் சாப்பிட்ட அதே நாளிலிருந்து அவர்கள் சாகத் தொடங்கினார்கள். அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போனது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!

தேவன் அவர்களுக்கு தண்டனை கொடுத்தார், சர்ப்பத்திற்க்கு  நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டுமிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய் என்றும். உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.

பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.

ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.

ஆதியாகமம் 3:16-23; 4:1, 2; வெளிப்படுத்துதல் 21:3, 4.


Comments

Popular posts from this blog

Vallamai Thevai Deva song lyrics - வல்லமை தாரும் தேவா

Enakkaagavae yaavaiyum seithu mudithaar song lyrics எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்

Nandri Sollamal Irukkave Mudiyathu Song lyrics. நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது