Posts

Showing posts from April 18, 2023

ஆதாம் ஏவாளின் கஷ்டமான வாழ்க்கை The hard life of Adam and Eve (Tamil Bible stories part 1,4)

Image
 ஆதாம் ஏவாளின் கஷ்டமான வாழ்க்கை தோட்டத்திற்கு வெளியே ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நிறைய பிரச்சினைகள் இருந்தன. சாப்பாட்டுக்காக அவர்கள் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியிருந்தது. சுற்றிவர அழகிய பழ மரங்களைப் பார்ப்பதற்குப் பதிலாக ஏராளமான முள் செடிகளைத்தான் பார்த்தார்கள். ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், அவருடனிருந்த தங்கள் நட்பை முறித்துக்கொண்டபோது அதுதான் நடந்தது. ஆனால் ஆதாம் ஏவாளுக்கு மோசமான வேறொன்றும் நடந்தது, ஆம், அவர்கள் குறிப்பிட்ட வயதிற்க்கப்புறம் சாகத் தொடங்கினார்கள். ஒரு குறிப்பிட்ட மரத்தின் பழத்தைச் சாப்பிட்டால் அவர்கள் செத்துப் போய்விடுவார்கள் என்று கடவுள் எச்சரித்திருந்தது உனக்கு நினைவிருக்கிறதா? அவர்எச்சரித்தது போலவே, அதைச் சாப்பிட்ட அதே நாளிலிருந்து அவர்கள் சாகத் தொடங்கினார்கள். அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போனது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! தேவன் அவர்களுக்கு தண்டனை கொடுத்தார், சர்ப்பத்திற்க்கு  நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டுமிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய...

தங்கள் வீட்டை ஏன் இழந்தார்கள் Adam and Eve are chased out of that beautiful garden of Eden. Do you know why? (Tamil Bible stories part 1.3)

Image
 தங்கள் வீட்டை ஏன் இழந்தார்கள் ஆதாமும் ஏவாளும் அந்த அழகிய ஏதேன் தோட்த்திலிருந்து வெளியே துரத்தப்படுகிறார்கள். ஏன் என்று உனக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் தேவனுக்கு கீழ்படியவில்லை. அதனால் அவர்களை தேவன் தண்டிக்கிறார். ஆதாமும் ஏவாளும் செய்த அந்த காரியம் என்னவென்று உனக்குத் தெரியுமா? செய்ய வேண்டாம் என்று தேவன் சொன்ன ஒன்றை அவர்கள் செய்தார்கள். அந்தத் தோட்டத்தின் மரங்களிலிருந்து கிடைக்கிற பழங்களை அவர்கள் சாப்பிடலாம் என்று தேவன் அவர்களிடம் சொல்லியிருந்தார். ஆனால் நன்மை தீமை அறியதக்க மரத்திலிருந்து மட்டும் பழத்தை சாப்பிடக் கூடாது என்றும், அப்படிச் சாப்பிட்டால் அவர்கள் செத்துப் போய் விடுவார்கள் என்றும் அவர் சொல்லியிருந்தார். ஒருநாள் ஏவாள் தனியாகத் தோட்டத்தில் இருந்தாள், அப்போது ஒரு சர்ப்பம் அவளிடம் பேசியது. அதைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்! சாப்பிடக் கூடாது என்று தேவன் சொன்ன அந்த மரத்திலிருந்த பழத்தைச் சாப்பிடும்படி அது ஏவாளிடம் சொன்னது. சர்ப்பத்தை உண்டாக்கியபோது பேசும் திறமையுடன் அவற்றை உண்டாக்கவில்லை. அப்படியானால், யாரோ ஒருவன்தான் அந்தப் சர்ப்பத்தைப் பேச வைத்திருக்க வேண்டும். அவன் யா...

முதல் மனிதனும் மனுஷியும் First Man and woman ( Tamil Bible stories part 1.2)

Image
  முதல் மனிதனும் மனுஷியும் முதல் மனிதனும் மனுஷியும் கடவுள் தான் அவர்களை உண்டாக்கினார். அந்த மனிதன் ஆதாம் என்றும், அந்த மனுஷி ஏவாள் என்றும் அழைக்கப்பட்டார்கள். தேவன் ஆதாமை எப்படி உண்டாக்கினார் தெரியுமா? பூமியிலிருந்து கொஞ்சம் மண்ணை எடுத்து, அதிலிருந்து ஒரு பரிபூரண மனித உடலை உருவாக்கினார். பின்பு அவனுடைய மூக்கிற்குள் ஜீவசுவாசத்தை ஊதினார், அப்போது ஆதாம் ஜீவாத்துமாவானான். தேவன் ஆதாமுக்கு ஒரு வேலையைக் கொடுத்தார். வித்தியாச வித்தியாசமான எல்லா மிருகங்களுக்கும் பெயர் வைக்கச் சொன்னார். அந்த மிருகங்களுக்கு மிகச் சிறந்த பெயர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அவை எல்லாவற்றையும் அவன் ரொம்ப காலமாகவே கூர்ந்து கவனித்து வந்திருக்கலாம். இப்படி அந்த மிருகங்களுக்குப் பெயர் வைக்கையில், ஆதாம் ஏதோவொன்றைக் கவனிக்க ஆரம்பித்தான். அது என்ன வென்று உனக்குத் தெரியுமா? அந்த எல்லா மிருகங்களும் ஜோடி ஜோடியாக இருந்தன. அங்கே அப்பா யானைகளும் அம்மா யானைகளும் இருந்தன, அப்பா சிங்கங்களும் அம்மா சிங்கங்களும் இருந்தன, ஆனால் ஆதாமுக்கு மட்டும் ஏற்ற துணை இருக்கவில்லை அதனால், ஆதாமை தேவன் நன்றாக தூங்க வைத்து, அவனுடைய விலா எலும்புகளில்...

ஓர் அழகிய தோட்டம் A beautiful garden பாகம் 1.1 ( Tamil Bible stories part 1,1)

Image
  ஓர் அழகிய தோட்டம் இந்தப் படத்திலுள்ள பூமியைப் பார்! அடடா, எவ்வளவு அழகாக இருக்கிறது! அதிலுள்ள பசும் புல்லையும், மரங்களையும், பூக்களையும், மிருகங்களையும் பார். யானை எது சிங்கம் எது என்று உன்னால் காட்ட முடியுமா? இந்த அழகிய தோட்டம் எப்படி வந்தது தெரியுமா? முதலில், இந்தப் பூமியை தேவன் நமக்காக எப்படித் தயார் செய்தார் என்று பார்க்கலாம். முதலாவதாக, நிலத்தின் மீது பசும் புல்லை அவர் முளைக்கச் செய்தார். பிறகு, எல்லா வகையான சிறிய செடிகளையும் புதர்களையும் மரங்களையும் உண்டாக்கினார். வளரும் இந்தச் செடிகொடிகளெல்லாம் பூமியை அழகுபடுத்துகின்றன. அதுமட்டுமா, நல்ல ருசியான உணவுப் பொருட்களையும் கொடுக்கின்றன. அடுத்ததாக, நீரில் நீந்துவதற்கு மீன்களை உண்டாக்கினார், வானத்தில் பறப்பதற்குப் பறவைகளை உண்டாக்கினார். நாய்களையும் பூனைகளையும் குதிரைகளையும் உண்டாக்கினார்; ஆம், பெரிய மிருகங்களையும் சிறிய மிருகங்களையும் உண்டாக்கினார். உன் வீட்டுக்கு அருகில் என்ன மிருகங்கள் வாழ்கின்றன? இவற்றையெல்லாம் கடவுள் நமக்காக உண்டாக்கியதை நினைத்து நாம் சந்தோஷப்பட வேண்டும் தானே? கடைசியாக, பூமியில் ஒரு இடத்தை மட்டும் ரொம்ப ரொம்ப அ...